முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (ஜன.10) பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார் ஓட்ட பழகிய பெண் ஒருவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவரின் கால் மீது கார் மோதியது. இதில், மூதாட்டி காலில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.