அரக்கோணம் அருகே தக்கோலம் பகுதியில் உள்ள லாட்ஜில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், தக்கோலம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 13 இளைஞர்கள் 12 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.