வேலூர்: உயர் அதிகாரி ஆசைக்கு இணைங்காததால் சஸ்பெண்ட்.. பெண் புகார்

வேலுார் மாவட்டம், அம்முண்டி அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 25 ஆண்டுகளாக முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வந்தார் ஒரு பெண் ஊழியர். அவர் உயர் அதிகாரியின் தொல்லை காரணமாக வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், மிரட்டி துறை ரீதியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் கூறி, நேற்று முன்தினம் (மே 27) வேலுார் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், அந்த அதிகாரி மீது பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி