மாந்தாங்கல் அருகே வந்தபோது, தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, பின்னால் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவி சுகன்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கலைக்குமார் பலத்த காயமடைந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.