குளத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, குளத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் வராமல் தடைபட்டுள்ளது. களைச்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சமீபகாலமாக குளத்தில் நிரம்பி வருகிறது.
இதனால், குளத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குளத்தை மீண்டும் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.