ராணிப்பேட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் (42) என்பவர், இரு நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது ஸ்பீட் பிரேக்கரில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.