ராணிப்பேட்டை மாவட்டம் முசிறி கல்குவாரியில் வேலை செய்து வந்த ஆறுமுகம் (60) என்பவர், நேற்று சைக்கிளில் வீடு திரும்பும்போது கல்குவாரியில் ஜல்லி ஏற்ற வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் முசிறி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.