குடியாத்தம் அருகே, டைலரிங் வேலை செய்யும் இளம்பெண்ணின் செல்போனைப் பயன்படுத்திய அவரது 13 வயது தம்பி, வாட்ஸ்அப்பில் வந்த பரிசு விழுந்ததாக வந்த மோசடி தகவலை நம்பி, கூகுள் பே மூலம் 45 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் பார்சல் பிடிபட்டதாகவும், 70 ஆயிரம் டாலர் பரிசுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மோசடி நபர்கள் மேலும் பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.