பணம் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தியுடன் மேம்பாலத்தின் வழியாக செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. 24-மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் அருகே ஓட்டல், கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த சிசிடிவி காட்சியினைக் கொண்டு வேலூர் சத்துவாச்சாரி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் முயன்ற வாலிபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.