இந்த நிலையில் செல்வம் சம்பவத்தன்று நிலம் தொடர்பாக ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். இதைக்கண்டு தடுக்க வந்த ஜெயலட்சுமியையும் சரமாரியாக அவர் அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த தம்பதியினர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்துள்ளனர்.