தொடர்ந்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் ச. சந்தோஷ், லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, ஊராட்சி மன்றத் தலைவி மு. லட்சுமி ஆகியோர் மாடுவிடும் விழாவைத் தொடங்கிவைத்தனர். பின்னர் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாகக் காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 பேர் மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 5 காளைகள் காயமடைந்தன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
Motivational Quotes Tamil