குடியாத்தம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை ஊராட்சி பச்சையப்பன் நகரை சேர்ந்தவர் சரவணன், இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு மோகன் (வயது 21), மேகநாதன் ஆகிய மகன்கள் உள்ளனர். சரவணனும், சாந்தியும் கோவையை அடுத்த அன்னூர் பகுதியில் கட்டிட தொழிலாளியாக உள்ளனர். 

மோகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று (மே 8) மதியம் வீட்டில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி