வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சுகுமார் (28), லோகேஷ் (25), கலையரசன் (24) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.