இது குறித்து அவர்கள் கூறுகையில், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (37) எலக்ட்ரீசியன் வேலை தேடி கடந்த மார்ச் மாதம் மலேசியா சென்ற நிலையில் இன்று காலை திடீரென அங்கு உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி உயிரிழந்த அனுன் தேவராஜன் சகோதரி விக்டோரியா மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மனுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறுகையில், இது தொடர்பாக இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.