இந்நிலையில் தாயிடம் இப்பவே ஸ்கூல் பேக் வாங்கி தரும்படி அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த கிரித்திக் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவை உடைத்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கிரித்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கிரித்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கிரித்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வீட்டை குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் குடியாத்தம் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?