இந்த நிலையில் இன்று எஸ். எஸ். எல். சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்த நிலையில் தேர்வில் தேர்ச்சி அடைய மாட்டோம் என்ற தோல்வி பயத்தில் பள்ளி மாணவி தீபிகாபாய் காலையில் வீட்டை விட்டு 7 மணிக்கு வெளியே சென்றுள்ளார். காலை 8. 30 மணி வரை தீபிகா பாய் வீட்டிற்கு வராததால் அவருடைய பெற்றோர் அவரைத் தேடி உள்ளனர். நிலத்தில் சென்று பார்த்தபோது மாட்டு கொட்டகையில் தீபிகாபாய் தூக்கு போட்ட நிலையில் கிடந்தார்.
உடனே அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.