காட்பாடி போலீசார் பணியிட மாற்றம்

காட்பாடி அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக குமரேசன், தனிப்பிரிவு காவலராக ராஜன்பாபு ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2 பேரும் பணியில் மெத்தனமாக இருந்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து 2 பேரையும் வேலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் நேற்று உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி