அப்போது அந்த விடுதியின் உரிமையாளரான, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் (62) அறையை சுத்தம் செய்வதற்கான கட்டணம் என கூடுதலாக ரூ. 1, 000 கேட்டுள்ளார். அதற்கு எதற்கு கூடுதலாக கட்டணம் கேட்கிறீர்கள் என முகமது சுகேந்தர் கேட்டுள்ளார்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி மாணவி மற்றும் முகமது சுகேந்தரை ஆபாசமாக திட்டி மேகநாதன் தாக்கியாத கூறப்படுகிறது. இது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்தார்.