அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், தீனதயாளனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பே இவருக்கு ஆஞ்சியோ அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அவர் சில நாட்களாக மாத்திரை சாப்பிடவில்லை என கூறப்படுகிறது. தீனதயாளன் இறந்தது குறித்து அவரது மனைவி உமா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.