குடியாத்தம்: கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை மாதவன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 45). இவரது மனைவி மகாதேவி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கோபால் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்தார். அவர் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபால் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். 

இதைப் பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோபாலை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கோபால் ஏற்கனவே இறந்து விட்டதுத் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் சென்று கோபால் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி