குடியாத்தம் அடுத்த ஏரிக்கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயம்மாள் (102). இவர், குடிசையில் தனியாக வசித்து வந்தார். நேற்று ஜெயம்மாள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.