திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மண் கடத்தப்படுவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருப்பத்தூர் அருகே ஏரியில் அனுமதியின்றி மண் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு டிராக்டர் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.