திருப்பத்தூர்: நிழல் கூடம் இல்லாததால்; பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் நாள்தோறும் ஆந்திர தமிழக எல்லைப் பகுதியான திருப்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வரை செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் ஆந்திர பேருந்துகள் சென்று வருகின்றன. இந்நிலையில் பச்சூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம் இல்லாததால், பஸ் நிறுத்தும் இடத்தின் அருகே உள்ள வீட்டு எதிரில் அமர்ந்து பேருந்து பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம் இல்லாததால் பேருந்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் தற்காலிக நிழல் கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி