அதனைத் தொடர்ந்து ரயில்வே எஸ்பி உத்தரவின் பேரில் ரயில்வே டிஎஸ்பிக்கள் பாபு (கோயம்புத்தூர்), பெரியசாமி (சேலம்) ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று (பிப்ரவரி 07) காலை ஜோலார்பேட்டை பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த ஏமராஜை பிடிக்க முயன்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கால் தடுக்கி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு காலில் மாவு கட்டுப் போடப்பட்டது.