அப்போது கழிவறையிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது கணவருக்கு கழிவறையிலிருந்து அம்ரிதா தெரிவித்துள்ளார். இதனால் கிஷான் இதுகுறித்து ரயில் பெட்டியில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் டிக்கெட் பரிசோதகர் பெட்டியில் பயணம் செய்த பெண்களுக்கு தெரிவித்து கழிவறையில் பிரசவ பெண்ணிற்கு உதவுமாறு அனுப்பினார். இதனை தொடர்ந்து இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தி கழிவறையில் பிரசவம் ஆகி இருந்த தாயையும் சேயையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரயில்வே மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூரில் தேமுதிக மாநாடு.. அதிகாரபூர்வ அறிவிப்பு