ஏலகிரி மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான தலமாக உள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு வாரவிடுமுறைகளில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏலகிரி மலைச் சுற்றுலா 

தளத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் மலை அடிவாரத்தில் இருந்து 14 வளைவுகள் உள்ள மலைச்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் இன்று 13-வது வளைவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தத் தீ மலைச்சாலைகளில் விபத்தைத் தடுக்க தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள டயர்கள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்தத் தீ தற்போது மளமளவென தீப்பிடித்து எரிந்து, தீயானது அனைத்து வளைவுகளிலும் பரவி, மலைச்சாலைகள் முழுவதுமாக புகைமூட்டமாகக் காட்சியளித்து வருகிறது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தற்போது அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் மலைக்குச் சென்று வருகின்றனர். மேலே சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீ பரவி வருவதைப் பார்த்து, சுற்றுலா தளத்திற்குச் செல்லாமல் உடனடியாகத் திரும்பிக் கீழே செல்கின்றனர். இந்தப் புகைமூட்டம் காரணமாக மலைச்சாலையில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி