சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். முனிரத்தினம் கலந்து கொண்டு வாரச்சந்தையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்களுக்கும், ஊராட்சி பணியாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது, இந்த வாரச்சந்தையில் அப்பகுதி விவசாயகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சோளிங்கர் காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் வி. கார்த்திக், தொகுதி பொறுப்பாளர் ஏ. எஸ். ராஜா, ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், அசோகன், வார்டு உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொடைக்கல் தி. மு. க. மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணி நன்றி கூறினார்.