அப்போது மந்தையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மந்தையில் சீறிப்பாய்ந்து வந்த மாடு முதியவரை முட்டியதில் தூக்கி வீசப்பட்டு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவரை மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.