இதனையடுத்து அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அனுமதி பெற்று கொடி கம்பம் அமைக்கும் மாறு அக்கொடி கம்பத்தினை அதிகாரிகள் தரப்பில் அகற்றி உள்ளனர். பின்னர் தவெக கொடி கம்பம் அமைக்க அக்கட்சியினர் அதிகாரிகளிடம் அனுமதி கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனை கண்டு கொள்ளாததால் அக்கட்சியினர் நேற்று (டிசம்பர் 25) இரவு அதே இடத்தில் கொடி கம்பம் அமைத்து கொடி ஏற்றி உள்ளனர். இதனை அறிந்த வருவாய் துறையினர் அக்கம்பத்தினை அகற்ற முயன்ற போது தவெக கட்சியினர் வட்டாட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக, அதிமுக, நாம் தமிழர், விசிக, ஆகிய கட்சிகளின் கொடி கம்பங்களும் உரிய அனுமதி இல்லாமல் தான் கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை முதலில் அப்புறப்படுத்துங்கள் என கூறி தவெக கட்சியினர் கூறியதால் வருவாய் துறையினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.