இந்த நிலையில் நேற்று (மார்ச் 23) இரவு ஏலகிரி மலை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணி ஒருவர் சரிந்து விழுந்த மரம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் கேசவன், கணபதி, வைகுந்தன், வாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சரிந்து விழுந்து கிடந்த மரத்தை இரவு நேரம் என்றும் பாராமல் மிகவும் சிரமத்துடன் சிறிது நேரம் போராடி அப்புறப்படுத்தினர். மேலும் இரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!