இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் காது மூக்கு தொண்டை நிபுணரான தீபாநந்தன் மருத்துவர் இன்று விடுமுறையில் இருந்தார். இருந்த போதிலும் குழந்தையின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்து கனிஷா குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார். எனவே குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது. இதன் காரணமாக குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க மருத்துவர் தீபாநந்தனுக்கு நன்றி தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?