ராணிப்பேட்டை மாவட்டம் மேலப்புலம் புதூர் கிராமத்தில் இன்று வேன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கை ஓட்டி வந்த ஓச்சேரியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (41) என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவளூர் போலீசார், சுபாஷ் சந்திரபோஸின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.