வேலூர் மாவட்டம், பெருமுகை ஊராட்சியில் ரூ. 45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை அமைச்சர் எ. வ. வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.