ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் அருகே, அரக்கோணத்திலிருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதையில் நேற்று (மே 6) சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காட்பாடி காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.