வேலூர்: நேற்று (பிப்ரவரி 19) மாலை காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ், விருதம்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து திறந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பஸ்ஸை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.