இதை பார்த்த பாதுகாவலர் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரத் அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர், அணைக்கட்டு காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் விக்னேஷ் (வயது 21), என்பதும், கடந்த ஒரு மாதமாக கடன் கணக்கில் இரும்பு கம்பிகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவலாளி மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.