வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுப் பறவைகள் அல்லது கோழிகள் இறந்து கிடந்தால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையிலோ அல்லது 0416-2214918 என்ற எண்ணிலோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி