இந்த நிலையில் முருகன் பனி முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது மின் விளக்கை போடுவதற்கு ஸ்விட்ச்சை ஆன் செய்த பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த முருகனின் பெற்றோர்கள் நேற்று மாலை வீட்டுக்கு வந்துள்ளனர். வீடு பூட்டி இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது மின்சாரம் தாக்கி முருகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சடைந்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.