இந்த நிலையில் வழக்கம் போல் சுதாகர் பணிக்குச் சென்று கார் பழுது பார்க்கும் பணிகள் செய்து கொண்டிருந்தபோது கார் ஒன்றை வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சுதாகர் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.