திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உடையராஜ்யபுரம் முதல் பாலூர் வரை சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பில் புதியதாக தார்சாலை கடந்த ஆண்டு போடப்பட்டது. இந்நிலையில் அச்சாலையில் அதிக அளவு லாரிகள் மண் ஏற்றி செல்வதால் ஒரே ஆண்டில் தார்சாலை மண்சாலையாக மாறி உள்ளது அவலம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.