வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச. 3) காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 341 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.41 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.