பின்னர் இதுகுறித்து முரளி வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். ஆம்பூர் வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. எனவே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மாணவி கொலை.. கனிமொழியை முற்றுகையிட்ட கிராம மக்கள்