சபரிமலை பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

சபரிமலை சென்று திரும்பிய திருவண்ணாமலை பக்தர்களின் வேன் இன்று (மே 15) கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், துலா பள்ளி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி