அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர் மீது தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் நியூயார்க் நீதிமன்றம் நிரந்தரமாக தள்ளுபடி செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இன்மை மற்றும் அமெரிக்க அதிகார வரம்பிற்குள் அந்த விவகாரங்கள் வராதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த போவதில்லை என அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.