சூடான், ஹைட்டி, காங்கோ மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் ரஷ்ய மற்றும் இஸ்ரேலியப் படைகளைத் தனது கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அந்த இரு நாடுகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என எச்சரித்தார். இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்ட 15 ஆண்டுகளில், இஸ்ரேல் இதில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.