சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை அளித்ததாக குமாரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது என்பதால், இது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கும், கம்பெனி விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.