“முதலமைச்சரின் அறை என்பது மிகவும் மரியாதைக்குரிய ஒரு இடமாகும்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், இன்று (மே.20) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “முதலமைச்சர் தனது அறையில் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, அங்கு 'ரீல்ஸ்' எடுக்கப்பட்ட நிகழ்வு மிகவும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் அறையில் இது போன்ற தேவையற்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதில், விஜய் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.