கடல் அலையில் சிக்கி ஐ.டி. பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு

சென்னையில் கடல் அலையில் சிக்கி ஐ.டி. பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர். இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். வார இறுதி நாளைக் கொண்டாட வந்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. குழுவாக வந்த ஐ.டி. பணியாளர்கள் கடலில் குளிக்கும் போது, அலையில் சிக்கிய மயூரி என்பவர் உயிரிழந்தார். கடலில் மாயமான ஜெய் என்பவரை போலீசார், மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி