தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் முயற்சி பண்ணுங்க.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் ஹிந்தி திணிப்பை முயற்சிக்கும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில் இன்று நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் பேசிய அவர், “தமிழகம், மேற்கு வங்காளத்தில் இந்த முயற்சியை செய்து பாருங்கள்” என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு சவால் விடுத்துள்ளார். பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கும் உத்தரவை கடந்த ஏப்ரலில் மகராஷ்டிரா அரசு பிறப்பித்தது. இதையடுத்து கடும் எதிர்ப்புகளால், அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி