மதுரையில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அடுத்த 2 மாதங்களுக்கு ஓய்வு எதுவும் இல்லாமல் வாக்காளர்களை சந்தித்து பணியாற்ற வேண்டும் என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது மதுரைக்கு மெட்ரோ திட்டம் ஏன் வழங்கப்படவில்லை என்று மக்கள் கேட்க வேண்டும் என்றார். மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் விமர்சனம் செய்தார்.